திருமலையில் மின்னல் தாக்கி ஒருவர் பலி!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்குவேலி பகுதியில் உள்ள வயல்வெளியில் வைத்து மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மூதூர் – கங்குவேலி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான கோபாலசாமி சந்திரகுமார் (வயது 45) என பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த நபர் வயல்வெளியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த போதே இவ் அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .

உயிரிழந்த நபரின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *