திருகோணமலை சைவர்களின் கோட்டை: மறவன்புலவு சச்சிதானந்தம் ஆவேசம்!

திருகோணமாமலை சைவர்களின் தலைமையகமாகும் என சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இருள் நீக்கி அருள் பெருக்குவார். மருள் நீக்கிப் பொருள் பெருக்குவார் திருக்கோணமாமலை அமர்ந்தார்.

இந்நிலையில் அப்பெருமானின் அருட்சூழலை கெடுக்காது ஆட்சியாளர் ஆணைகளைத் தருவேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். அமைச்சர் விது விக்கிரமநாயக்கவை துணைக்கு அழைப்பேன் என்றார் டக்ளஸ்.

சொன்னதைச் செய்பவர். செய்வதைச் சொல்பவர். பழமொழிகள் பெருக்கித் தமிழ் மொழியின் சைவத்தின் மேன்மையைக் காப்பவர் தேவானந்தா.

அரசு எடுத்த சைவருக்குத் தகாத முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்தார். அப்பொழுது அமைச்சரவைச் சகாக்களின் ஆதரவைப் பெற்றார்.

இப்பொழுது திருகோணமலைக்கு நேரில் சென்றுள்ளார். அடுத்து வரக்கூடிய தடைகளையும் தடுத்து நிறுத்துவார். திருகோணமலை அமர்ந்தாரின் 400 ஏக்கர் நிலப்பரப்பையும் சைவர்களுக்கு உரித்தாக்குவார் என்ற நம்பிக்கை சிவ சேனையில் உள்ளவர்களுக்கு உண்டு என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *