<!–
மரம் அரியும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக மூன்று மர ஆலைகள் முற்றாக எரிந்ததாக பெரிய நீலாவணை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ காரணமாக அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 3மர ஆலைகள் உள்ளிட்ட களஞ்சிய சாலைகள் இவ்வாறு எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தை அடுத்து வருகை தந்த கல்முனை மாநகர சபை தீயணைப்பு பிரிவினர் தீ பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.