காணமல் போன புலிக் குட்டிகள் கண்டுபிடிப்பு

ஹட்டன் – திக் ஓயா, இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் காணாமல் போன இரண்டு மலைப்புலி குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நல்லதன்னிய வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பத்து நாட்களே ஆன, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இரண்டு ஆண் மற்றும் பெண் மலைப்புலி குட்டிகள் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவற்றை பாதுகாப்பாக வைத்து தாய்புலிக்கு கொண்டு செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது மலைப்புலியின் தாய் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டது.

குட்டிகள் அங்கிருந்து சென்ற சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு தாய் மலைப் புலி வந்து முதலில் ஆண் புலிக்குட்டியை எடுத்துச் சென்றதாகவும், சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு பெண் புலிக்குட்டி வனப்பகுதிக்குச் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இங்கஸ்ட்ரி தோட்டத்தின் தோட்ட அத்தியட்சகர் திரு.ரஜித் குணசேகரம் உட்பட ஊழியர்கள் மற்றும் கிராம மக்கள் மற்றும் கிராம மக்கள் தேவையான வசதிகளை செய்து கொடுத்து உடனுக்குடன் தகவல் வழங்கியதை பாராட்டுவதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *