பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் திறந்து வைப்பு

யாழ். கைதடி பகுதியில் பனை அபிவிருத்தி சபையின் தலைமை அலுவலக கட்டிடம் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ். கைதடியிலுள்ள பனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டட தொகுதியே திறந்து இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விழாவில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த,பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி, பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த பத்திராஜா, யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேசன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *