யாழில் பனங்கள்ளை தேடி அலைந்த இராஜாங்க அமைச்சர்!

பனை அபிவிருத்தி சபையின் யாழ் தலைமை காரியால கட்டடத்தொகுதி திறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழிற்கு வருகை தந்த பெருந்தோட்டத்துறை ராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்த இன்று காலை யாழ்ப்பாணத்தில் பனங்கள்ளு குடிப்பதற்கு அலைந்ததாக தெரிவித்தார்.

இன்றைய நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

45 வருடங்களாக வாடகை வீட்டில் செயல்பட்டு வந்த பனை அபிவிருத்தி  சபைக்கு இன்றைய தினம் ஒரு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

45 வருடங்களின் பின்னர் பனை அபிவிருத்து சபையின் தலைவரின்  முயற்சியின் பயனாக இன்றைய தினம் சொந்த கட்டிடத்தில் நீங்கள் குடியேறுவதை யிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பல்லாயிரக்கணக்கான  பனை மரங்கள் உள்ள இடமாக  வடபகுதி  காணப்படுகின்றது

இன்று காலை நாங்கள் வந்து பனங்கள்ளு தேடிய போது யாழ்ப்பாணத்தில் பனங்கள்ளு  இல்லை.

இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்தி  பொருட்களுக்கு மேற்குலக நாடுகள் அதிக கேள்வி காணப்படுகின்றது,

வடபகுதி மக்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுவது என்பது அனைவருக்கும் தெரியும்

அத்தோடு இங்கே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான வழிகாட்டுதலின் கீழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளை நாங்கள் முன்னெடுப்போம்

பனை அபிவிருத்தி கைத்தொழிலானது மிகவும் அபிவிருத்தி அடைவதோடு வடபகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற உதவ வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *