இரண்டு வாரங்களில் 450 கோடி வசூல் சாதனை படைத்த பொன்னியின் செல்வன்?

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.

இத்திரைப்படம் வெளியான பிறகு மன்னர் ராஜ ராஜ சோழனை பற்றியும், சோழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இணையதளத்தில் சோழர்கள் போர் பற்றி தெரிந்து கொள்ளும் தேடுதலும் நடக்கிறது.

அண்மையில் தெலுங்கு மொழியில் பொன்னியின் செல்வனைப் பார்த்த ஆந்திராவை சேர்ந்த ரசிகர்கள் சிலர் சோழர்கள் வாழ்ந்த இடங்களைப் பார்க்க தங்கள் இரு சக்கர வாகனங்களில் சுற்றுப்பயணமாக தமிழ் நாட்டிற்கு வந்தனர்.

பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் வெளியான 12 நாட்களில் 450 கோடி ரூபாயினை வசூல் செய்திருப்பதாக திரைப்பட வர்த்தக தொடர்பாளர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஜேர்மனியில் எப்போதும் இல்லாத வகையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் -1 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *