
“நீர் விபத்துக்களை தடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் அனர்த்த முகாமைத்துவத்தின் உயிர்காப்பு மற்றும் முதலுதவிக்கான இன்று (வியாழக்கிழமை) திருகோணமலை கடற்கரையில் இடம்பெற்றது.
திருகோணமலை அனர்த்தமுகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பொலிஸ் கடற்படை அமைப்பினரது ஏற்பாட்டில் குறித்த நிகழ்வானது இடம்பெற்றது.
இதன்போது மீன்பிடியில் ஈடுபட்டவர்களுக்கு முதலுதவி அளித்து உயிர் காக்கும் செயன்முறையானது காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் குறித்த பயிற்சி நிகழ்வில் திருகோணமலை பிரதி போலீஸ் மா அதிபர் லயனல் குணதிலக, திருகோணமலை மவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் சுகுனதாஸ், பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.