பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடல்

பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இலங்கை பிரதிநிதிகள் கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் வொஷிங்டனில் நடைபெறுகின்ற சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தின்போது இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

56 பொதுநலவாய உறுப்பு நாடுகள் பொருளாதார மற்றும் நிலைபேறான அபிவிருத்தியை மையமாக வைத்து குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளதாக நிதி,பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோர் இந்த கலந்துரையாடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *