நாடு பலப்படுத்தப்பட்டவுடன் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் வஜிர அபேவர்தன, பல அரசியல்வாதிகள் வாக்குகளை கேட்கவில்லை, ஒளிந்து கொள்ள இடம் கேட்கிறார்கள் என்று கூறினார்.
தற்போது தேவைப்படுவது தேர்தல் அல்ல, நாட்டை தேசிய பாதையில் கொண்டு செல்லும் போராட்டமே . இந்த தருணத்தில் தேர்தலை கோருவது நாட்டை மீண்டும் குப்பை தொட்டியில் தள்ளுவதாகும் எனவும் தெரிவித்தார்.
வீழ்ந்த நாடு எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஜனாதிபதியினால் எழுப்பப்படும் எனவும், அதன் பின்னர் நாட்டின் வீழ்ச்சிக்கான காரணங்களை அரசியலமைப்பிலேயே கண்டறிந்து நீக்க வேண்டும் எனவும் அபேவர்தன தெரிவித்தார்.
பிறசெய்திகள்