1 ஓட்டத்தால் இலங்கை அணிக்கு கிடைத்த வாய்ப்பு

இன்று (13) இலங்கை வீராங்கனைகள் ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை பெண்கள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் பெண்கள் அணி 20 ஓவர்கள் நிறைவடைந்த நிலையில்,6 விக்கெட் இழப்புக்கு 121 ஓட்டங்களைப் பெற்று 1ஓட்டத்தால் தோல்வியடைந்தது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *