இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை அணி

மகளிர் ஆசிய கிண்ணத்தின் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.

மகளிர் ஆசிய கிண்ணத்தின் இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று நடைபெற்றது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இந்த போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 35 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்ஜிவனி 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்கு 123 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 121 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதனால், இலங்கை அணி ஒரு ஓட்டங்களினால் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 15ம் திகதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *