தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அடுத்த 24 மணித்தியாலங்களில் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்று (வியாழக்கிழமை) காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் காலி, ஹகொட பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த பகுதியில் 142.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இது தவிர மொனராவி, கிரிதிவெல,  எல்ஸ்டன், காலி, அவிசாவளை, ஹினிதும ஆகிய இடங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *