நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக ,இன்று பிற்பகல் 1.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களுக்கு பொருந்தும்.
நாட்டைச் சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை தொடர்ந்தும் காணப்படுவதாகவும், அதற்கமைய, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு தீவின் தென்மேற்குப் பகுதியில் மழை பெய்யக் கூடும்.
இந்த மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழையும் பெய்யக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிறசெய்திகள்