யாழில் ஆட்டோ ஓட்டுநர் மீது வாள்வெட்டு: இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட குழுவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம், தொடர்பில் கொக்குவில் – வராகி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குழுவை சேர்ந்த மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். கடந்த 05 ஆம் திகதி கொக்குவில் பகுதியில் இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் குற்றப்புலனாய்வு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *