கழுத்தில் கத்தி வைத்து வழிப்பறி! மானிப்பாயில் கொள்ளையர்கள் துணிகரம்!

கழுத்தில் கத்தி வைத்து வழிப்பறி! மானிப்பாயில் கொள்ளையர்கள் துணிகரம்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குவேலி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை வழிமறித்து கழுத்தில் கத்திவைத்து கொள்ளையிட்ட சம்பவம் இன்று(13) மதியம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;-

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் பெண் ஒருவர் வீட்டிற்கு பயணித்துக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வழிமறித்து கழுத்தில் கத்தியை வைத்து அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அறுத்ததுடன் கைப்பையையும் அபகரித்துக்கொண்டு தப்பிச் செண்றுள்ளனர். கைப்பையில் கைத்தொலைபேசி உட்பட பல பெறுமதி மிக்க பொருட்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *