மகள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சந்தேக நபரான தந்தை கைது!

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. 5 நாட்களுக்கு முன்னர் அவர் தனது 7 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என குறித்த சிறுமியின் பேர்த்தியாரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைவாக பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் 30 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஆபாச காணொலிகளை வற்புறுத்தி காண்பித்தே அவர் வன்புணர்விற்கு முயற்சித்துள்ளார் என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *