தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக பொது பாதுகாப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, முதன்முறையாக தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டையின் நகலைப் பெறுவதற்கு 1000 ரூபாய் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய அடையாள அட்டையின் திருத்தப்பட்ட பிரதியை வழங்குவதற்கு 500 ரூபாயும் காலாவதியான தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய தேசிய அடையாள அட்டையைப் பெறுவத்கு 200 ரூபாயும் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *