குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவு

<!–

குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவு – Athavan News

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடம்பெறும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விசேட குற்றச்செயல்களை தடுப்பதற்காக தென் மாகாணத்தில் புதிய பொலிஸ் பிரிவு ஒன்று அமைக்கப்படவுள்ளது.

வெலிகம, மிரிஸ்ஸவில் அமைந்துள்ள மாத்தறை குற்றப் பிரிவு என்ற பெயரிடப்பட்ட புதிய பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) திறக்கப்படவுள்ளது.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவின் அறிவுறுத்தலின் கீழ் இந்த பிரிவு ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டைக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்தப்பரிவு செயற்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *