
திலினி பிரியமாலி உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு எந்தவித வரிக் கொடுப்பனவையும் செலுத்தியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அபேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்நாட்டு இறைவரி சட்டத்திற்கு அமைய திலினி பிரியமாலி தவறிழைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக அவரிடம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அபராதம் விதிக்க முடியும் அதன் ஆணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி தொடர்பில் கைதான அவர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் நிதி வைப்பு மற்றும் மேலும் சில வர்த்தகங்களுக்கான நிதி வைப்புக்காக இலாபத்தை பெற்றுத்தருவதாக கூறி அவர் உலக வர்த்தக மைய மேற்கு கோபுரத்தின் 34 ஆம் தளத்தில் நிறுவனம் ஒன்றை நடத்திச் சென்றிருந்தார்.
கோடீஸ்வர வர்த்தகர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் அவரது நிறுவனத்தில் வைப்பு செய்துள்ளதாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிறசெய்திகள்