
தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபன்ன நுழைவாயில் இரண்டு இடங்களில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால், சிறிய வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்குள் நுழையவோ, வெளியேறவோ முடியாது என நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் பிரிவின் திரு.நிஹால் லோட்ரிக் தெரிவித்தார்.
எனவே, அதிவேகப் பாதையில் கொழும்பு அல்லது காலி நோக்கிச் செல்ல விரும்பும் சாரதிகள் குறைந்தபட்சம் தொடங்கொட அல்லது குருந்துகஹாவில் அதிவேகப் பாதையில் பிரவேசிக்க அல்லது வெளியேறுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிறசெய்திகள்