யாழில் கட்டடம் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

யாழ்.போதனா மருத்துவமனை வீதியிலுள்ள புதிய அமைக்கப்படும் கட்டடம் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இன்று (14) காலை சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

திருநெல்வேலியைச் சேர்ந்த 32 வயதுடைய கட்டடப் பணியாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் பொலிஸ் விசாணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *