பிள்ளைகளைப் பாரமாக எவரும் எண்ணக்கூடாது-ஞானப்பிரகாசம் தெரிவிப்பு!

பிள்ளைச் செல்வம் என்பது இறைவனின் ஆசீர்வாதம். பிள்ளைகள் இல்லாத பெற்றோரின் துன்ப நிலையை அனைவரும் உணர்வீர்கள். எனவே பிள்ளைகளைப் பாரம் என்று பெற்றோரும் பிள்ளைகளால் எமக்குத் தொல்லை என்று ஆசிரியர்களும் எண்ணக்கூடாது. இவ்வாறு பேசாலை பங்கு தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தெரிவித்தார்.

பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

இறைவனின் ஸ்தானத்தில் ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். சிறார்களைப் பராமரித்து இவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது ஒரு இலகுவான விடயம் அல்ல

கற்றுக் கொடுப்பதைவிட இவர்களுடன் இருந்து இவர்களைப் பராமரிப்பது மிகவும் ஒரு கடினமான பணி. நாம் யாவரும் கடினமான பணியில் ஈடுபட்டாலும் சிறார்களுடன் இருந்து செயற்படும் ஆசிரியர்கள் இதற்கு மேலானாவர்கள். பிள்ளைச் செல்வம் என்பது இறைவனின் ஆசிர்வாதம். பிள்ளைகள் இல்லாத பெற்றோரின் துன்ப நிலையை நீங்கள் உணர்வீர்கள்.

அத்துடன் பிள்ளைகளால் எமக்குத் தொல்லை என்று ஆசிரியர்களும் எண்ணக்கூடாது. பிள்ளைகள் இறைவன் தந்த சொத்துக்கள் என உணர்ந்து செயற்பட வேண்டும். பிள்ளைகள் தான் எமக்கு எதிர்காலம் என்றார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *