
கொழும்பு,ஒக்.14
அரசுக்கு எதிராக நவம்பர் 2ஆம் திகதி கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்ற கூட்டம் கொழும்பில் நடந்தது.
இதன்போதே, 2ஆம் திகதி எதிர்ப்பில் ஈடுபடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.