
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆர்.பி.கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மவுசாகல தோட்டத்தில் தொழிலாளர்கள் பரிக்கும் பச்சை கொழுந்து அதே தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் அரைக்கும் மாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை முன் வைத்து இப் போராட்டம் நேற்று இன்று மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தோட்ட தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில் எங்கள் தோட்டத்தில் லக்கம், சீர்பாதம்,ரதபூட்,சீட்டின்,மவுசாகல ஜந்து பிரிவில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவ்வாறு பணி புரியும் தோட்ட தொழிலாளர்கள் பரிக்கும் பச்சை கொழுந்து அதே தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் அரைக்கும் படி கோரிக்கை முன் வைத்தும் இந்த தோட்டத்தில் உள்ள பணியாளர்களுக்கு தேயிலை தொழிற்சாலையில் பணி வழங்க கோரி இந்த போராட்டம் நேற்று இன்று தோட்ட காரியாலய முன்பாக மற்றும் தேயிலை தொழிற்சாலை முன் நடத்தி வருகின்றனர்.
பிறசெய்திகள்