
பாராளுமன்ற பிரிவுக்குட்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நெற்றியில் வலுக்கட்டாயமாக முத்தமிட்ட சம்பவம் தொடர்பில் அதே பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கொழும்பு மேலதிக நீதவான் திரு.கெமிந்த பெரேராவிடம் நேற்று (13) அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் பணி நிமித்தமாக அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ஒரு படிக்கட்டுக்கு அருகில் நின்றிருந்த பொலிஸ் சார்ஜன்ட் பின்னால் இருந்து வந்து அவரது தலையைப் பிடித்து வலுக்கட்டாயமாக நெற்றியில் முத்தமிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் தான் மிகவும் அச்சம் மற்றும் அவமானம் அடைந்ததாக முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் நீதிமன்றில் அறிவித்தது.
பிறசெய்திகள்