யாழில் கட்டம் ஒன்றில் நபர் ஒருவரின் சடலம் தொங்கிய நிலையில் இருந்துள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது இன்று அதிகாலை 06 மணியளவில் யாழ்பபாணம் ஆஸ்பத்திரி வீதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அக்கட்டத்திற்கு பணிக்கு வந்த 32 வயதுடைய திருநெல்வேலியைச்சேர்ந்த நபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த பகுதியில் தனியார் விடுதியில் இடம்பெற்ற மதுபான விருந்தில் கலந்து கொண்டதன் பின்னரே இறந்துள்ளார்.
அந்நபர் மது போதையில் மாடியில் இருந்து விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் சந்தேகிக்கப்படுவதாகவும்.
அவருடன் வேலை பார்த்த 10 தொழிலாளர்களை பொலிஸார் விசாரணையின் பேரில் விளக்குமறியலில் வைத்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.