வேல்ஸில் இனரீதியாக வேறுபட்ட ஆசிரியர்களை அதிகரிக்க புதிய திட்டம்!

இனரீதியாகப் பலதரப்பட்ட ஆசிரியர்களை ஈர்ப்பதற்கு இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று வேல்ஸின் கல்வி அமைச்சர் ஜெர்மி மைல்ஸ் கூறியுள்ளார்.

பிரித்தானிய காலனித்துவ வரலாற்றை பாடசாலைப் பாடங்களில் கட்டாயமாக்கிய முதல் பிரித்தானிய நாடு வேல்ஸ் ஆகும்.

இப்போது இதற்கு ஆதரவாக ஆசிரியர்களுக்கான புதிய இனவெறி எதிர்ப்பு பயிற்சி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

வேல்ஸின் முதல் கறுப்பின தலைமை ஆசிரியரின் பேத்தி, இது தொழிலில் நுழையும் கறுப்பின மக்களின் நம்பமுடியாத அளவிற்கு குறைந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று நம்புவதாகக் கூறினார்.

இதுகுறித்து கல்வி அமைச்சர் ஜெர்மி மைல்ஸ் கூறுகையில், ‘இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது என்ற சவாலை நான் முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன், அதைச் செய்வதற்கான தெளிவான திட்டம் எங்களிடம் உள்ளது, அது நடந்து கொண்டிருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக அதைச் செய்ய சிறிது நேரம் எடுக்கும்’ என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *