யாழில கசிப்பு அருந்திய இளைஞனை மீட்க முற்கபட்ட பெற்றோரை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்கள்!

யாழில் நண்பர்களுடன் கசிப்பு அருந்திய மகனை மீட்க முயன்ற பெற்றோர் மற்றும் சகோதரியை மகனுடன் இருந்த இளைஞர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்றையதினம் கொடிகாமம் பாலாவி வடக்கு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் வாழ்ந்து வரும் குடுமத்தினர் வீட்டில் உள்ள மகள் வெளியில் சென்றதையடுத்து இன்னும் வீட்டிற்னு வராததால் தேடிச்சென்றுள்ளனர்.

இதனையடுத்து மகள் பற்றைக்குள் சில இளைஞர்களுடன் சேர்ந்து கசிப்பு அருந்தியதை கண்ட பெற்றோர் மற்றும் சகோதரி மகனை கூப்பிட்ட வேளையில் அவருடன் இருந்த இளைஞர்கள் சகோதரியையும் பெற்றோரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 42 வயதான தந்தை, 21 வயதான மகள் மற்றும் 25 வயதான இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் தாக்குதலை மேற்கொண்ட கெற்பேலி மேற்கைச் சேர்ந்த இளைஞரும் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மதுபான விலை அதிகரிப்பின் பின்னர் கெற்பேலி, பாலாவிப் பகுதியிலுள்ள பற்றைக் ளில் கசிப்பு உற்பத்தி அதிகரித்துள்ளதெனவும் உரிய தரப்பினருக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை எனவும் அந்தப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *