உக்ரைனிய துருப்புக்கள் முன்னேற்றம்: கெர்சன் குடியிருப்பாளர்களை வெளியேற்ற ரஷ்யா முடிவு!

உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்யாவிற்கு வரத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் ரஷ்யாவால் நிறுவப்பட்ட அதிகாரி, கெர்சன் பகுதியில் உள்ள குடியிருப்பாளர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக வெளியேற வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

ரஷ்யப் படைகளின் பலவீனமான பிடியின் அடையாளமாக கெர்சன் இணைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. முன்னேறி வரும் உக்ரைனிய எதிர் தாக்குதலுக்கு மத்தியில் குடியிருப்பாளர்கள் வெளியேற இது உதவும் என்று ரஷ்யா கூறியுள்ளது.

கெர்சன் பிராந்தியத்தில் வசிப்பவர்கள் வெளியேறுவதற்கான உதவியை ஏற்பாடு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ரஷ்ய துணைப் பிரதமர் மராட் குஸ்னுலின் தெரிவித்தார்.

உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தின் ரஷ்ய-நிறுவப்பட்ட ஆளுநர் விளாடிமிர் சால்டோ, தெற்கு பிராந்தியத்தில் ஐந்து குடியேற்றங்களை மீட்டெடுத்ததாக உக்ரைன் கூறியதை அடுத்து, குடியிருப்பாளர்களை தங்கள் குழந்தைகளுடன் வெளியேறும்படி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *