கிராஞ்சி அட்டைப்பண்ணை விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

எங்கள் கிராஞ்சி கடற்பரப்பில் பாரம்பரிய தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அட்டுப்பண்ணை தொடர்பாக 04.10.2022 அன்று மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.அந்த முறைப்பாட்டிற்கு அமைவாக இன்று எங்களை விசாரணைக்கு அழைக்கப்பட்டு நீரியல் வள அதிகாரியுடன் கலந்துரையாடியிருந்தோம் என கிராஞ்சி மீனவ பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்

அக்கலந்துரையாடடலில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி ,அட்டுப்பண்ணைக்கும் தனக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை ,கடலை மாத்திரமே நாம் அளவை செய்கின்றோம்.

அட்டுப்பண்ணைக்கான அனுமதியினை வழங்குவது என்பதனை நெக்ட்ரா தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.இது தொடர்பாக அடுத்த விசாரணை மிகத்தெளிவானதாக இருக்கும் அத்துடன் அதற்கு நெக்ட்ராவை அழைப்பதாக மனித உரிமை ஆணைக்குழு அதிகாரி கூறியிருந்தார்.

இன்றுடன் 15 ஆவது நாளாக இந்த கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்தி வருகின்றோம்.இது தொடர்பாக சரியான நீதியினை பெற்றுத்தரவேண்டும் என்று சம்மந்தப்பட்ட அனைத்து பொறுப்பதிகாரிகளையும் கேட்டுக்கொள்கிறோம்.என்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *