மூன்று மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக காலி, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மிகுந்த அவதானதுடன், வாகன சாரதிகள் நிதானதுடனும் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராட்சி மத்திய நிலையம் அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பை விடுத்துள்ளது.

தொடந்து 24 மணித்தியாலங்களுக்கு மேலாக அனர்த்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் இன்று காலை அறிவித்துள்ளது

களுத்துறை அகலவத்த, மத்துகம, பண்டாரகம, பாலிந்தநுவர, புளத்சிங்கள, இங்கிரிய, வலல்லாவிட்ட, தொடங்கொட ஆகிய பிரதேசங்களிலும்
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலப்பாத்த, அயகம, கிரியெல்ல, பெல்மெடுல்ல, நிவித்திகல, கலவான ஆகிய பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் நிலவுவதாகவும் கட்டிட ஆய்வு மேலும் தெரிவித்துள்ளது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *