பெற்றோல் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து சுமார் 200 முறைப்பாடுகள் பதிவு

பெற்றோல் நிரப்பு நிலையங்களில் இடம்பெறும் முறைகேடுகள் குறித்து கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த முறைகேடுகள் தொடர்பாக சுமார் 200 முறைப்பாடுகள் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

எரிபொருளின் தரம் சரியாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நாடு முழுவதும் உள்ள நிரப்பு நிலையங்களில் இருந்து 20 எரிபொருள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சோதனைக்காக தொழில் நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

60 நிரப்பு நிலையங்களில் எரிபொருள் மாதிரி சோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வுகளின்போது, பல நிரப்பு நிலையங்கள் எரிபொருளை மறைத்து வைத்திருப்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்த அவர், பல நிரப்பு நிலையங்கள் குறைந்த எரிபொருளை விநியோகித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *