தீப்பெட்டியில் ஐஸ் போதைப் பொருள்: பெண் கைது!

தன்னுடைய மார்பு பகுதியில் மறைத்து வைத்திருந்த தீப்பெட்டிக்குள் ஐஸ் போதை பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தீப்பெட்டிக்குள் சிறிய பொலித்தீன்களில் சுற்றப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த 29வயது டைய பெண்னொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைச்சாலையில் இருந்து பாணந்துறை நீதிமன்றத்துக்கு
குறித்த பெண்ணின் தந்தையை அழைத்து செல்லப்பட்டபோது கைதியான தனது தந்தைக்கு வழங்க,வைத்திருந்த தீப்பெட்டிக்குள் ஐஸ் போதைப்பொருளை மறைத்து அதனை மார்ப்பு கச்சைக்குள் மறைத்து வைத்து எடுத்து​வந்து தனது தந்தைக்கு கொடுக்க முயற்சித்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *