மலையக தலைமைகள் எம்மோடு இணையுமானால் கைகோர்க்க நாம் தயார்-கஜேந்திரகுமார் உறுதி!

மலையக மக்களின் பிரச்சினைகள் வேதனைக்குரியது எமக்கு நன்கு தெரியும் அவர்கள் இந்த நாட்டின் அபிவிருத்திக்கும், பொருளாதாரதிற்க்கும்
முக்கிய பங்காளிகள் அவர்களின் வாழ்வு நிலை மாற வேண்டும்
உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்க வேண்டும் இது அரசினதும், மலையக தலமைகளின் கட்டாய கடமையாகும் மலையக உள் அரசியலில் நாம் நுழைய முடியாது நுழைந்து சரியான வழியை காட்டினால் நாம் குட்டையை குழம்புவதாக கூறுவர் இவ்வளவுதான் கூறமுடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற மன்ற உறுப்பினர்களோடு இணைந்து செய்ற்படவும் நாம் தயார், மலையக மக்கள் விரும்பி வருகின்ற விடயங்கள் அனைத்துக்கும் நாம் யோசிக்காமல் பச்சை கொடி உயர்த்துப்பவர்கள்.ஆனால் தமிழர்கள் என்ற ரீதியில் அவர்கள் எதிர் நோக்கும் துன்பங்களை சம்மந்தப்பட்டவர்கள் தீர்கவில்லை என்றால் நாம் பார்த்து கொண்டு இருக்க முடியாது.

எதாவது ஒரு வகையில் உதவ வேண்டும். முஸ்லீம் மக்கள் கடந்த காலங்களில் ஜனாசா பிரச்சினையில் முஸ்லீம் தலைவர்கள் அக்கறை செலுத்துவது இல்லை எமக்கு உதவி செய்யுங்கள் என்று சுமார் 200க்கு மேற்பட்ட சிவில் அம்மைப்பின் தலைவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடம் கேரிக்கை விடுத்தனர்.

அதை போல் பாதிக்கபட்ட மலையக மக்களின் பிரதநி திகள் அல்லது சிவில் அமைப்புககளின் தலைவர்கள் எம்மோடு இணையுமானால் நாம் அவர்களுக்கு உதவ பின்னிக்கபோவதில்லை.

அந்த மக்களை அண்மையில் ஐ. நா விசேட தூதுவர்களின் அறிக்கையில் குறிப்பிடுக்கையில், மிக மோசமாக மலையக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அல்லது அடிமை படுத்தப்பட்டுள்ளார்கள் என சுட்டி காட்டியிருந்தார்கள் இது யார் பொறுப்பு அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள்தான் பொறுப்பு கூற வேண்டும்.

மலையக மக்கள் மீது நாம் மரியாதை வைத்திருகின்றோம் அவர்கள் எமது உறவுகள் அந்த தலைமைகள் எம்மோடு இனையுமானால் நாம் கைகோர்க்க தயார் என அவர் தெரிவித்தார்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *