அபிவிருத்தி ,பாதுகாப்பு உரிய காலத்தில் பேணப்பட வேண்டும் – அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்

அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்புத் திட்டங்கள் என்பன சமகாலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர்அஹமட் தெரிவித்தார்.

சுற்றாடல் சபையின் 14 ஆவது அமர்வின்,ஐந்தாவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

காலநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் சர்வதேசத்தின் முயற்சிகளுக்கு நாடென்ற வகையில் இலங்கை ஆதரவளிக்கவுள்ளது. பசுமைப் பொருளாதாரம், பச்சைவாயுக்கழிவுகளை கையாள்வதில்,சர்வதேச ஆதரவுகளை இலங்கை ஏற்கனவே கோரியுமுள்ளது.

கைத்தொழில் அபிவிருத்திகளில் புதிய நடைமுறைகளை நோக்கி ஒரு ஒழுங்கமைப்பின் பிரகாரம் நகர்த்த வேண்டிய தேவைக்குள் எமது நாடு வந்துள்ளதையும் குறிப்பிடல் அவசியம்.

அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் கைத்தொழில் துறைகளில் நவீன யுக்திகளைக் கையாண்டு சுற்றாடல் மாசடைவதை தடுப்பதற்கான வழிகள் குறித்த நோக்குகளை நோக்கியே நாம் நகர வேண்டும். இதற்கு,எதிர்க்கட்சி மனோபாவமுள்ள செயற்பாடுகளிலிருந்து நாம் மாற வேண்டும்.இதற்காக ஒவ்வொருவரது ஆதரவுகளையும் நாம் எதிர்பார்க்கிறோம்.

அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளின் வெற்றிக்கு அமைச்சுக்களுக்கிடையிலான உள்ளக உறவுகள் மற்றும் தொடர்பாடல்கள் இன்றியமையாதன. இவ்வாறான செயற்திட்டங்களை அமுல்படுத்துகையில் துறைசார்ந்தோரை சம்மந்தப்படுத்த எண்ணியுள்ளோம். இத்துறைகளில் பரஸ்பரச் செயற்பாடுகளை விஸ்தரிக்க ஒன்றுபட்டுச் செயற்படவுள்ளேன்.

இக்கூட்டத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் எஸ்.அமரசிங்க, அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பி.பி ஹேமந்த ஜயசிங்க, சுற்றாடல் கவுன்சில் தலைவர் சட்டத்தரணி, கலாநிதி ஜெகத் குணவர்தன உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *