யாழில் அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 111 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சோதனையானது இன்று காலை யாழ்.நவாலி – அட்டகிரி பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பகுதியல் காணி உரிமையாரள் துப்பரவு செய்யும்போது சந்தெகத்திற்கிடமான பொருள் ஒன்றை கண்டு பொலிஸாரக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இது குறித்து முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட மானிப்பாய் பொலிஸார் அப்பகுதிக்கு விரைந்து கைக்குண்டுகளை அடையாளம் கண்டுள்ளளனர்.
இதனையடுத்து நீதிமன்றத்தில் அனுமதிப்பெற்று இன்று 14ம் திகதி காலை 6மணிமுதல் யாழ் மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.