வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி மாடுகளை ஏற்றிச்சென்ற சந்தேக நபர் கைது

வவுனியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒமந்தை பகுதியிலிருந்து சம்மாந்துறை நோக்கி இன்று (14.10.2022) காலை மாடுகளை ஏற்றிசென்ற வாகனம் ஒன்றை வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி தலைமையிலான பொலிஸ் குழுவினர் நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது அனுமதிப்பத்திரமின்றி 11 மாடுகளை ஏற்றி செல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டதுடன், குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்த பொலிசார் மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *