திருகோணமலையை அபிவிருத்தி செய்ய ஒத்துழைக்க வேண்டும்: ஜனாதிபதி ரணில்

திருகோணமலை,ஒக் 14

திருகோணமலையை மூலோபாய துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் இலங்கை ஒத்துழைக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்களில் செல்வாக்கு செலுத்துவதற்காக அல்ல, எதிர்கால சந்ததியினருக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்ட “சுர்பானா ஜூரோங்” மாஸ்டர் பிளான் பற்றி விளக்கமளிக்கும் மாநாடு இன்று இடம்பெற்ற நிலையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *