
இந்தியா,ஒக் 14
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்.
பிசினஸ் குளோபல் இன்டர்நேஷனல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி வைக்கும் விழா நாளை (15) சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் இந்தியா – சென்னையிலுள்ள சஃபாரி கிறான்ற் விடுதியில் இடம்பெறவுள்ளது.
இந்தப் பாராட்டு விழாவில் ஆசியாவின் பல பாகங்களிலும் இருந்து சமூக சேவை ஊடாக கல்வி, சுகாதார மற்றும் பல துறைகளில் சேவையாற்றியவர்களுக்கு இந்த ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், கிழக்கு மாகாணத்தில் சமூக, கல்வி சேவைக்காக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் அவர்களுக்கு இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் ‘விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றது.