யாழில் மதுவரி நிலையத்தினரிடம் சிக்கிய கசிப்பு வியாபாரி!

நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் 500 மில்லிலீற்றர் கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.

சித்தங்கேணி மதுவரி நிலையத்தினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கசிப்பினை வைத்திருந்த சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

சந்தேகநபர், வேறு பகுதியில் இருந்து கொள்வனவு செய்யப்படும் கசிப்பானை அராலி பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளார். இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிராமவாசிகள் பலதடவைகள் இரகசிய தகவல் வழங்கியும் கசிப்பு விற்பனையாளர்களை கைது செய்வதில் பொலிஸார் பின்னடித்து வந்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் சித்தங்கேணி மதுவரி நிலையத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மதுவரி நிலையத்தினர் குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *