சரும தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க நமது தோல் நமக்கு உதவுகிறது. எனவே நாம் அதை நன்றாக கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம். சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருப்பது சரும தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க உதவும். அதற்கு ஐஸ் க்யூப்கள் மிகச்சிறப்பாக உதவுகின்றன. நேரடியாக தண்ணீரால் கிடைக்கும் ஐஸ் க்யூப்களை (ice cubes) விட பழங்கள், வெள்ளரிக்காய் போன்ற சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் சில இயற்கைப் பொருள்களைக் கொண்டு இன்ஃப்யூஸ்டு செய்யப்பட்ட ஐஸ் க்யூப்களைப் (infused ice cubes) பயன்படுத்துவது நல்லது. அதை எப்படி செய்வது, எப்படி பயன்படுத்தினால் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இங்கே பார்க்கலாம்.
அதிகப்படியான ரசாயனங்கள் கலந்த பொருட்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் சருமம் வறண்டு போதல் அல்லது சரும எரிச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறோம். ஆனால் இயற்கையாக வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தும்போது இதுபோன்ற சருமப் பிரச்சினைகளையும் பல பக்க விளைவுகளையும் தவிர்க்க முடியும். அப்படி மிகச்சிறந்த பயன்களைத் தரும் ஒரு பொருள் தான் இந்த ஆரஞ்சு, பப்பாளி ஐஸ் க்யூப். அதை எப்படி செய்யலாம், அதனால் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்
பளபளப்பான மற்றும் கண்ணாடி போன்ற சருமம் வேண்டும் என நம்மில் பலரும் விரும்புகிறோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு நாம் சரியான உணவு பழக்கத்தை கடைபிடித்தல் மற்றும் சருமத்தை முறையாக பராமரித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.
சருமத்தை அழகாக வைத்திருப்பது என்பதை விட ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது தான் முக்கியம். சருமம் ஆரோக்கியமாக இருக்க அதற்குத் தேவையான போதிய ஊட்டச்சத்துக்களை நாம் கொடுக்க வேண்டும்.
அதற்கு கடைகளில் கிடைக்கும் க்ரீம்களை போன்றவற்றை விட இயற்கையான ஊட்டச்சத்துக்கள் அடங்கிய காய்கறிகள், பழங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவது மிக நல்லது. அதனால் அழகு, ஆரோக்கியம் இரண்டுமே பாதுகாக்கப்படும்.
தேவையான பொருட்கள்
2 பப்பாளி பழத்துண்டுகள்
ஒரு சில ஆரஞ்சு துண்டுகள்
சிறிது சாமந்தி பூவின் இதழ்கள்
ஐஸ் க்யூப் டிரே
செய்முறை
மேலே குறிப்பிட்ட ஆரஞ்சு, பப்பாளி, சாமந்தி ஆகிய எல்லா பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். பழங்களில் ஏற்கனவே தண்ணீர் இருக்கும் என்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. இந்த கலவையை ஐஸ் க்யூப் தயாரிக்கும் ட்ராயில் சேர்த்து ஐஸ் கட்டியை செய்து கொள்ளவும்.
உங்கள் வசதிக்கேற்ப, தினமும் இரண்டு முறை இந்த ஐஸ் கட்டிகளை முகத்தில் மசாஜ் செய்யலாம். நேரடியாக மசாஜ் செய்ய சிரமாக இருந்தால், சுத்தமான காட்டன் துணியில் ஐஸ் க்யூப் வைத்து மசாஜ் செய்யலாம்.
முதலில், முகத்தில் ஐஸ் கொண்டு மசாஜ் செய்வது உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இது நம்முடைய சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைத் தணிக்கவும், சோர்வு தோற்றத்தைக் குறைக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், சரும பளபளப்புக்கும் வழிவகுக்கிறது.
பழங்கள் மற்றும் பூக்களின் நன்மைகளை கொண்டு, குறிப்பாக ஆரஞ்சு, பப்பாளி மற்றும் சாமந்தி ஆகியவை உங்களின் சருமத்திற்கு இயற்கையான பிரகாசத்தை அளிக்கிறது.
இந்த ஐஸ் க்யூப் துளைகளை சுருக்கவும், கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்கவும், மேலும் வெயிலின் காரணமாக ஏற்படும் டான் அல்லது தடிப்புகளைத் சரி செய்யவும் உதவுகிறது.
வெறும் தண்ணீர் கொண்டு செய்யப்படும் ஐஸ் க்யூப் சருமத்துக்கு நன்மைகளை தந்தாலும், மிகச்சிறந்த பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் எப்போதும் இயற்கையான பொருட்களைச் அதனுடன் சேர்த்துப் பயன்படுத்துவது நல்லது.
தக்காளி சாறு அல்லது வெள்ளரிக்காய் சாறு, மேலே குறிப்பிட்டுள்ள பப்பாளி-ஆரஞ்சு-சாமந்தி பூ வகையைப் போல எதை வேண்டுமானாலும் நீங்கள் அரைத்து ஐஸ் கட்டியாக செய்து, முகத்தில் தடவலாம்.
skin care: சரும சுருக்கத்துக்கும் சருமத்தில் ஏற்படும் மெல்லிய கோடுகளுக்கும் என்ன வித்தியாசம்? இரண்டும் ஒன்றா?
ஆரஞ்சுகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. எனவே இது உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்க உதவுகிறது.
அதேபோல பப்பாளியில் பப்பேன் உள்ளது. இது இயற்கையான டி-டானிங் மற்றும் கெமிக்கல் எக்ஸ்ஃபோலியேட்டராக நமக்கு உதவுகிறது. இது உங்கள் சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது. சாமந்தி பூக்களில் நமது சருமத்தை குணப்படுத்தும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன.