‘சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே’ எனும் தொனிப்பொருளில் நீதியான சமுதாயத்திற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு.ஜெயசூரியாவின் தலைமையில் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தற்போது விசேட கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது இடம்பெற்றுவரும் கலந்துரையாடலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பல முக்கிய அரசியல் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் ஒரே மேசையில் அமர்ந்து கொண்டனர்.
