ரயில்வே திணைக்களத்தை வர்த்தக ரீதியாக சாத்தியமான முயற்சியாக மாற்றுவதற்கு அதனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சு கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களம் வருடாந்தம் 10 பில்லியன் ரூபாவை செயற்பாட்டு இழப்பை எதிர்கொள்வதாகவும், அரசாங்கத் திணைக்களம் என்ற வகையில் அதன் நிறுவன அமைப்பு வர்த்தக ரீதியான சாத்தியத்தை மழுங்கடிக்கிறது.
2021 இல் திணைக்களம் 2.6 பில்லியன் ரூபாவை மாத்திரமே ஈட்டியது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக மாத்திரம் 2.3 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. சம்பளம் வழங்குவதற்காக 7 கோடி ரூபா செலவிடப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இது பெரும் செயற்பாட்டு இழப்பில் இயங்குகிறது. வணிக நம்பகத்தன்மையை மேம்படுத்த சரியான கட்டமைப்பை நாம் கண்டுபிடிக்க வேண்டும். சட்டப்பூர்வ சபையாக இயங்கினால், சில முடிவுகளை எடுக்கலாம்.
தற்போது, திணைக்களத்தில் 8,000 காலியிடங்கள் உள்ளன, அவற்றில் 1,000 ரயில்வே காவலர்கள், என்ஜின் டிரைவர்கள் மற்றும் ஸ்டேஷன் மாஸ்டர்கள் போன்ற அத்தியாவசிய பிரிவுகளில் உள்ளன.
ரயில்வே காவலர்கள் பற்றாக்குறையால் வார இறுதி விசேட ரயில் சேவைகள் விரிவாக்கம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்