இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு யாழ் இந்திய துணைத் தூதரகத்தால் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில், இந்தியா முற்றத்தில் உள்ள அவரது சிலைக்கு யாழ் இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் மலர் மாலை அணிவித்து மற்றும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதேபோல், தலைமை நூலகர் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருக்கு நூலக அதிகாரிகள் மற்றும் துணை தூதரக அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அத்தோடு, டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் “மணல் சிற்பம்” யாழ்ப்பாணம் காரைநகரிலுள்ள கசூரினா கடற்கரையில் யாழ் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரால் உருவாக்கப்பட்டது.
அதற்கு யாழ் இந்திய துணைத் தூதுவர், காரைநகர் பிரதேச சபை தவிச்சாளர் திரு. க.பாலச்சந்திரன் மற்றும் சுற்றுலா பயணிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமார் அவர்களை ஊக்குவிற்கும் பொருட்டு யாழ் இந்திய துணைத் தூதுவர் ரொக்கப் பரிசு வழங்கினார்.

யாழ் இந்திய துணைத் தூதுவர் தமது உரையில், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் திறன்களை வலுப்படுத்துவதற்கான Dr. காலமின் விலைமதிப்பற்ற பங்களிப்பிற்காக புகழ்பெற்ற விஞ்ஞானி எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று குறிப்பிட்டார்.
பிறசெய்திகள்