மண்சரிவினால் மண்ணுக்குள் புதையுண்ட தந்தை, தாய் மற்றும் மகன் சடலங்களாக மீட்பு!

கனமழையின் காரணமாக மண் சரிவின்போது மண்ணுக்குள் புதையுண்ட தந்தை, தாய் மற்றும் மகன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பமானது கேகாலை, வரகாபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது.

24 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்புக் குழுவினரால் இன்று மீட்கப்பட்டுள்ளது. வரகாபொல பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று பாரிய மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

தந்தை, தாய் மற்றும் மகன் மண்ணில் புதையுண்ட நிலையில் நேற்று மாலை தந்தை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாய் மற்றும் மகனின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இக்குடும்பத்தின் இரண்டாவது மகன் மேற்படிப்புக்காக வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மண்சரிவில் சிக்கி உயிர் பிழைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *