வவுனியா தவசிகுளம் பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் கனரகவாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தவசிகுளம் பகுதியூடாக பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியினை விட்டு கீழ் இறங்கி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
