மக்களின் பாவனைக்காக குடி நீர் விவசாய பொதுக்கிணறு கையளிக்கும் நிகழ்வு!

மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக நலன் பண்பாடு அறப்பணி மையத்தினால் மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மக்களின் பாவனைக்காக குடி நீர் விவசாய பொதுக்கிணறு கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஆதிபராசக்தி அறப்பணி மையம் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஊடாக விடுத்த கோறிக்கைக்கு இணங்க சுவீஸ் நாட்டின் ஆதிபரா சக்தி அறப்பணி மையத்தின் ஏற்பாட்டில் புச்சாக்கேணி வடிச்சல் கதிரவெளியில் மக்கள் பயன்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது.

வம்மிவட்டவான்,4ஆம்,5ஆம் கட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களின் நீண்ட கால குடி நீர் பிரச்சினை,விவசாய செய்கை மற்றும் கால் நடைகளுக்கான குடி நீர் தேவை போன்றவற்றிக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது.லண்டன் நாட்டினை சேர்ந்த ஓம் சக்தி அம்மா காப்பகம் செவ்வாடை சக்திகளின் பூரண நிதி பங்களிப்புடன் இவ் விவசாய கிணறு அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அறப்பணி மன்றத் தலைவி திருமதி சக்தி கலைவாணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமசேவகர்களான கஜேந்திரன், விஜயராஜன்,பொலிஸ் உத்தியோகஸ்த்தர்,பொதுச் சுகாதார பரிசோதகர்,மதகுருமார்கள் மற்றும் அனைத்து மாவட்ட அறப்பணி தொண்டர்களும் கலந்து கொண்டனர். இதன்போது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

அத்துடன் மர நடுகை இடம்பெற்றதுடன்,பிரதேசத்தில் சேவையாற்றிய கிராமசேவகர்,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *