நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உலக நாணய நிதியத்தின் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசாங்கம் அளவுக்கு அதிகமாக வரிவிதிப்பு செய்கிற ஒரு கட்டம் உருவாகிருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நேற்றையதினம் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
உலக நாணய நிதியத்தின் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அரசாங்கம் அளவுக்கு அதிகமாக வரிவிதிப்பு செய்கிற ஒரு கட்டம் உருவாகிருக்கிறது.
இதன் மூலம் வருகிற பிரதி கூலங்கள் சம்மந்தமாக சரியான ஒரு ஆய்வை செய்து செய்ததாக எமக்கு தென்படவில்லை. இதன் மூலம் நிறைய நடுத்தர வர்க்க உற்பத்தியாளர்கள் தொழில் முயற்சிகள் மிக மோசமாக பாதிக்கப்படும் நிலவரம் உருவாகும் என்று தெரிகிறது.
எனவே இதை அரசாங்கம் இயன்றவரை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் தனிப்பட்ட வரிவிதிப்பு என்பது மக்களுக்கு இருக்கின்ற சுமைகளுக்கு அப்பால் மிக மோசமாக அவர்களுடைய வாழ்வாதரத் தாக்கங்களை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் இந்த விவகாரம் மீண்டும் மீள்பரிசீலனைக்கு உற்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்
”கட்டாயமாக அதிலே நாங்கள் முழுமூச்சாக ஈடுபட்டு வருகிறோம். இயன்றவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் போன்றோர் முன்னெடுத்த அந்த நடவடிக்கைகக்கு எங்களுடைய பூரண ஆதரவை நாங்கள் சகல பிரதேசங்களிலும் வழங்கி இருக்கிறோம்.
இது ஒரு சமூகத்திற்கு எதிரான விசயமாக இல்லாமல் இன்று சகல சமூகங்களையும் இளைஞர்களையும் ஒட்டுமொத்தமாக பாதிக்கின்ற சிவில் சமூகத்தின் உரிமைகளைப் பறிக்கிற அரசாங்கம் தன்னுடைய இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கு மக்கள் மீது அடக்குமுறையை பிரயோகிப்பதற்கு வசதியாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பலவாறாக பாவிக்கிற ஒரு நிலைமை உருவாகி வருகிறது.
இந்த அக்கருமத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இதை சர்வதேச ரீதியாக இதற்கெதிரான விமர்சனங்களை சேர்த்து உள் நாட்டிலே இதற்கு எதிரான எதிர்ப்பலைகள் மிக மோசமாக இன்று உருவாகி வருகிறது. அதிலே எங்களது பங்களிப்புத் தொடர்ந்தும் இருக்கும் என தெரிவித்தார்.
பிறசெய்திகள்