இலங்கை ஒரு நடுத்தர வருமான நாடு என்றும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி காணப்பட்டாலும் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே உள்ளது என்றும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.
ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்தின் பொருளாதாரக் கண்ணோட்டம் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஊடகவியலாளர் மாநாட்டின் போது, பிரதிப் பணிப்பாளர் எனே மாரி குல்ட் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கை ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மிகவும் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், அது குறித்து மிகவும் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்களின் துன்பங்களை, குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களின் துன்பங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிக வேகமாக செயல்பட ஆர்வமாக உள்ளதாக எனே மாரி குல்ட் தெரிவித்துள்ளார்.
பிறசெய்திகள்